2030இல் 51 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும்: ஐ.நா
2026ஆம் ஆண்டு உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை என்ற அறிக்கையை, ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்வதேச வேளாண்மை வளர்ச்சி நிதியம், யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை ஜுலை 21ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன. 2025ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்திருந்த போதிலும், 2030ஆம் ஆண்டில் 51 கோடி முதல் 52 கோடி வரையிலான மக்கள் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டினியின்மை என்ற தொடரவல்ல வளர்ச்சிக்கான இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21-Jul-2026